வண்ணப் புகைப்படம் எடுக்கும் முயற்சி என்பதும் 1848ஆம் ஆண்டில் நடந்தது. ஆனால் அந்த புகைப்படங்கள் சில மணி நேரங்களில் மங்கி மறைந்தன. ஸ்காட்டிஷ் இயற்பியல் அறிஞர் ஜேம்ஸ்கிளாக் மாக்ஸ்வெல் (James clerk maxwell) என்பவர் 1861ஆம் ஆண்டில் முதன்முதலாக நிரந்தரமாக அழியாத வண்ணப் புகைப்படத்தை எடுத்தார்.

இவர் 1831ஆம் ஆண்டு ஜுன் 13 அன்று ஸ்காட்லாந்து நாட்டில் ஏடின்பர்க் என்னும் ஊரில் பிறந்தார். இவர் மின்சாரம், காந்தப்புலம், ஒளி ஆகியவற்றை ஆராய்ந்து ஒரு சமன்பாட்டை உருவாக்கினார். மின்சாரம் மற்றும் காந்தப் புலங்களின் வேகம் ஒளி வேகத்துக்குச் சமமானது என்று அவர் விளக்கினார். இவருடைய ஆய்வுகள் இயற்பியல் வளர்ச்சிக்குப் பெரும் பங்கு ஆற்றின. இவர் 1861ஆம் ஆண்டில் சிவப்பு, ஊதா மற்றும் மஞ்சள் நிறங்களை உடைய ரிப்பன் புகைப்படம் எடுத்தார். அந்தப் புகைப்படமே உலகில் முதன்முதலாக எடுக்கப்பட்ட வண்ணப் புகைப்படமாகும். அது இன்றைக்கும் அதேநிலையில் உள்ளது.

பிலிம் :

முதன்முதலாக கேமராவில் பயன்படுத்தும் பிலிம் சுருளை ஜார்ஜ் ஈஸ்டமென் என்பவர் கண்டுபிடித்தார். இவர் 1871ஆம் ஆண்டில் செல்லுலாய்டு பிலிமைத் தயாரித்தார். இது பிளாஸ்டிக் போன்றது. இவரே 1888ஆம் ஆண்டில் கோடாக் கேமராவைத் தயாரித்தார். இந்தக் கேமராவில்தான் பிலிம் சுருள்களை முதன்முதலில் பயன்படுத்தினார். இவர் தயாரித்த கேமராவில் 100 படங்களை எடுக்கக்கூடிய படச்சுருளை அடைத்து விற்பனை செய்தார். அதன் பிறகே கேமிராவை பலர் விலைக்கு வாங்கினார்.

கோடாக் கம்பெனியர் படங்களை அச்சிட்டுக் கொடுத்தனர். அத்துடன் புதிய பிலிம் சுருள்களை கேமராவில் போட்டு அனுப்பியும் வைத்தனர். இதனால் போட்டோ கலையானது வளர்ச்சியடைந்தது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book