இந்திய நாட்டின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபால் நகரில் யூனியன் கார்பைடு என்னும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 1984ஆம் ஆண்டு டிசம்பர் 3 அன்று மீத்தேல் ஐசோ சயனேட் என்னும் நச்சு வாயு கசிந்ததினால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து உலகில் உள்ள தொழிற்சாலைகளில் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகப்பாதிப்பை ஏற்படுத்திய ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனால் இதனை போபால் பேரழிவு என்று அழைக்கின்றனர்.

இந்த வழக்கின் குற்றவாளியாக வாரன் ஆண்டர்சன் அறிவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்படாமல் கௌரவத்துடன் அமெரிக்கா சென்றார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. போபால் பேரழிவால் ஏற்பட்ட நச்சுக் கழிவுப் பொருட்கள் தொழிற்சாலையின் உள்ளே 350 டன் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. இந்த தொழிற்சாலையை விலைக்கு வாங்கிய டோ கெமிக்கல்ஸ் என்னும் நிறுவனமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. போபால் துயரத்தின் காட்சியாக குழந்தையின் புகைப்படம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book