உலகின் சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்தாக இருப்பது பென்சிலின். இரண்டாம் உலக யுத்தத்தின்போது காயமடைந்த போர் வீரர்களைத் தொற்றுநோயிலிருந்து பாதுகாத்தது பென்சிலின் மருந்தாகும். பென்சிலினுக்கு நன்றி, நாங்கள் வீடு திரும்புவோம் என காயம்பட்ட வீரர்கள் பென்சிலின் மருந்திற்கு நன்றி தெரிவித்தனர். பென்சிலின் கண்டுபிடிப்பதற்கு முன்புவரை பிரசவத்தின்போது தாய்மார்கள் இறப்பதும், பிறந்த பின் குழந்தைகள் இறப்பதும் சர்வசாதாரணம். லேசான சிராய்ப்புகளும், கீரல்களும்கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. பென்சிலின் கண்டுபிடிப்பானது இறப்பு விகிதத்தைக் குறைந்துவிட்டது. பென்சிலின் என்ற நோய் எதிர்ப்பு மருந்தை அலெக்சாண்டர் பிளெமிங் என்பவர் 1928ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். முதலாம் உலகப் போரின்போது படை வீரர்கள் பலர் காயமடைந்து தொற்றுக்கிருமிகள் தாக்கப்பட்டு இறந்தனர். இதனைக் கேள்விப்பட்ட இவர் மருந்தைக் கண்டுபிடிக்க தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

அவர் கிருமிகள்மீது ஆராய்ச்சி செய்த தட்டின் மீது படிந்திருந்த பூஞ்சனத்தால் கிருமிகள் முழுவதும் அழிந்து இருப்பதைக் கண்டார். இந்தப் பூஞ்சனம் பென்சிலினா நோடேடம் என்பதாகும். இதனைக் கொண்டு மருந்து தயாரித்தார். அதற்கு பென்சிலின் எனப் பெயரிட்டார். பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. இதைக் கடந்த 1000 ஆண்டு காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவித்துள்ளனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book