கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மரணப் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பாறைகள் தானாக நகர்ந்து செல்கின்றன. இது ஒரு புவியியல் அதிசயமாகக் கருதப்படுகிறது. முதன்முதலில் 1900ஆம் ஆண்டில் இது கண்டறியப்பட்டது. இது ஒரு புரியாத புதிராக அப்போது இருந்தது. அதனைத் தொடர்ந்து புவியியல் அறிஞர்கள் 1915ஆம் ஆண்டு முதல் ஆய்வுகள் செய்து அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர். மரணப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவின் ரேஸ்ட்ரேக் பிளேயா (Racetrack Playa) என்னுமிடத்தில் இதுபோல பாறைகள் நகர்கின்றன. மனிதன் அல்லது விலங்குகளின் செயல்பாடுகள் இல்லாமலே பாறைகள் நகர்ந்து செல்கின்றன. சிறிய பாறைகள் தவிர 300 கிலோ எடை கொண்ட பாறைகளும் நகர்கின்றன. இடதுபுறம், வலதுபுறம், தானாக திரும்பி பழைய பாதையிலே பயணம் செய்தல் போன்ற சம்பவங்கள்கூட நடக்கின்றன. பாறை நகர்தல் என்பது குளிர் காலத்தில் மட்டுமே நடக்கின்றன. கோடைக் காலத்தில் நடப்பதில்லை.

விஞ்ஞானிகள் பாறைகளின்மீது பெயரிட்டு அவை நகருவதை ஆராய்ந்தனர். ஜி.பி.எஸ். கருவி பொருத்தியும் ஆய்வு செய்தனர். குளிர் காலத்தில் பூமியின் அடியில், பாறையின் அடியில் பனி உறைந்து மெல்லிய படலம் உண்டாகிறது. பகல் பொழுதில் சூரிய வெப்பத்தால் உறைந்த பனிக்கட்டிகள் உருகுவதாலும், பனிப்புயல் வீசுவதாலும் பாறைகள் நகர்கின்றன என்பதைக் கண்டுபிடித்தனர். அதுதவிர இதுபோன்று செயற்கை முறையில் ஒரு சூழலை உருவாக்கியும் பாறை நகர்வதற்கான அறிவியல் உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book