உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஏன் விண்வெளியில் இருந்தாலும் அவருடன் பேசும் வாய்ப்பை நமக்கு ஏற்படுத்திக் கொடுப்பது தொலைபேசி (Telephone) என்னும் கருவியாகும். இதனை அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்பவர் 1876ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று கண்டுபிடித்தார். தந்தி முறையில் வெறும் ஒலிகளை மட்டுமே அனுப்பப்பட்டன. பேச்சுகளை அந்த முறையில் அனுப்பலாமே என்ற நோக்கில் அவர் ஆராய்ச்சி தொடங்கினார். ஒருபுறம் பேசும் மனிதக் குரலை எடுத்துச் சென்று மறுபகுதியில் இருப்பவர்க்கு கேட்கும் ஒரு கருவியை கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டார். வாட்சன் என்கிற உதவியாளர் அந்த அறையில் இருந்தார். மின் பாட்டரியில் உள்ள அமிலம் கிரகாம் பெல்லின் முழு கால்சட்டையில் பட்டுவிட்டது. வலி தாங்காமல் வாட்சன் இங்கே வாருங்கள், உங்களைக் காண வேண்டும் எனக் கத்தினார். இது அடுத்த அறையில் இருந்த வாட்சனுக்குக் கேட்டது. இதுவே தொலைபேசியில் பேசிய முதல் வார்த்தை.

இதை அறிந்த கிரகாம் பெல் திரும்பவும் அவருடன் பேசினார். இப்படி தொலைபேசி கண்டுபிடித்தப் பிறகு இது தன்னுடைய கண்டுபிடிப்பு என்பதை நிரூபிக்க அவர் நீதிமன்றம் சென்று பல வழக்குகளை சந்தித்தார். அதன் பிறகே அவருக்கு காப்புரிமை கிடைத்தது. அதன் பிறகு அவர் பெல் தொலைபேசிக் கம்பெனியை ஆரம்பித்தார். பெல் இறந்த போது அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book