தொலைக்காட்சி என்பது மிக முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக விளங்கி வருகிறது. பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் நடக்கும் சம்பவங்களை நம் வீட்டிற்குள்ளே, நம் கண் முன்னே கொண்டுவந்து காட்டும் அதிசயத்தை தொலைக்காட்சிப் பெட்டி நிகழ்த்துகிறது. பொழுதுபோக்கு அம்சங்கள் தவிர கல்வி, அரசியல், பொருளாதாரம், பருவ நிலை, நாட்டு நடப்பு என அனைத்து தகவல்களுடன், நமது வாழ்க்கைக்கு தேவையான பல விசயங்களையும் கொடுக்கிறது. இந்த தொலைக்காட்சியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஜான் லோகி பியார்டு (John Logie Baird) என்பவராவார். இவர் டெலிவிசர் (Televisor) என்ற தொலைக்காட்சிப் பெட்டியை 1923ஆம் ஆண்டில் உருவாக்கினார். இவர் ஒரு பொம்மையின் உருவத்தை மக்களுக்கு திரையில் தெரியும் காட்சியை முதலில் இயக்கிக் காட்டினார். அதன் பின் ஒரு சிறுவனின் முகத்தை தொலைக்காட்சியில் காட்டினார். வில்லியம் யாண்டன் என்பவருக்கு பணம் கொடுத்து இயந்திரத்தின் முன் நிற்கவைத்தார். அடுத்த அறையில் உள்ள திரையில் அவரின் முகம் தெரிந்தது.

ஒலி அலைகள் மூலம் முதன்முதலாக தொலைக்காட்சியில் வில்லியம் யாண்டனின் முகம் காட்டப்பட்டது. இதன் பிறகு லண்டனில் தொலைக்காட்சி அலைவரிசை கட்டிடம் கட்டப்பட்டு நிகழ்ச்சி பரிமாற்றம் செய்யப்பட்டது. 1928ஆம் ஆண்டில் லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு அலைவரிசை பரிமாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர் உலகளவில் ஒலி பரப்பானது நடைபெறத் தொடங்கியது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book