செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட முதல் விலங்கான ஆட்டின் பெயர் டோலி (Dolly) ஆகும். இந்த ஆட்டினை குளோனிங் (Cloning) எனப்படும் படியெடுப்புமூலம் உருவாக்கினர். இயன் வில்மட் மற்றும் கீத் கேம்பல் ஆகியோர் இணைந்து வளர்ப்பு விலங்கான செம்மறி ஆட்டை உருவாக்கி அதற்கு டோலி எனப் பெயரிட்டனர். குளோனிங் முறை என்பது மிகவும் வித்தியாசமானது. வெள்ளை முகம் கொண்ட பெண்ஆட்டின் பால் காம்பிலிருந்து ஒரு செல்லை எடுத்து அதன் உட்கருவை நீக்கினர். கருப்பு முகம் கொண்ட பெண் ஆட்டின் முட்டை செல்லை எடுத்து உட்கருவை நீக்கிவிட்டனர். அந்த இடத்தில் வெண்ணிற முகம் கொண்ட ஆட்டின் உட்கருவை பதியச் செய்தனர். இப்படி உருவான கருவை கருப்பு முகம் கொண்ட வாடகைத்தாய் ஆட்டின் கருப்பையில் வைத்தனர். இதன்மூலம் 1996ஆம் ஆண்டு ஜூலை 5 இல் டோலி பிறந்தது. ஆகவே டோலி ஆட்டிற்கு மூன்று பெற்றோர்கள்.

டோலியை உருவாக்குவதற்கு 277 கருமுட்டைகள் பயன்படுத்தப்பட்டு தோல்வி கண்டு இறுதியாக 278 ஆவது கருமுட்டையினால்தான், டோலி பிறந்தது. டோலி நுரையீரல் நோயினால் 2003ஆம் ஆண்டு பிப்ரவரி 14இல் இறந்தது. மிகவும் பிரபலமடைந்த இந்த டோலியின் உடல் பதப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் மரபணுவை பயன்படுத்தி மேலும் நான்கு ஆடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book