உலகில் உள்ள ஏழு புதிய அதிசயங்களில் தாஜ்மகாலும் (Taj Mahal) ஒன்றாகும். இதனை யுனெஸ்கோ அமைப்பு 1983ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலிருந்து ஆண்டிற்கு 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தாஜ் மகாலைக் காண வருகின்றனர். இது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரில் யமுனை நதிக் கரையில் அமைந்துள்ளது. இது உலகளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது காதலின் சின்னமாக உலகளவில் புகழ்பெற்றுள்ளது. இது முகலாய பேரரசர் ஷாஜகான் என்பவரால் கட்டப்பட்டது. தனது மூன்றாவது மனைவியான மும்தாஜ் இறந்து போனதன் நினைவாக தாஜ்மகால் கட்டப்பட்டது. இதனை கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆகின. சுமார் 22000 பணியாளர்களைக் கொண்டு 1632 முதல் 1653ஆம் ஆண்டிற்கு இடையில் கட்டப்பட்டது. தாஜ்மகால் முழுவதும் வெண்ணிறச் சலவைக் கற்களால் கட்டப்பட்டது.

தாஜ்மகாலின் கட்டிடத் தொகுதியானது 300 மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு முகலாயப் பூங்காவைச் சுற்றி அமைந்துள்ளது. தாஜ்மகாலின் வெளிப்புறம் நிறப்பூச்சு, சாந்துப் பூச்சு, கற்கள் பதித்துள்ளனர். அழகூட்டல்களில் செடி, கொடி வடிவங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உட்கூடத்தில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. தாஜ்மகால் பாரசீகக் கட்டிடக்கலை மரபுகளையும், பழைய முகலாய மரபுகளையும் அத்துடன் இந்திய அம்சங்களையும் உள்ளடக்கி, அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book