எலும்பு முறிவுச் சிகிச்சை மருத்துவத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பது எக்ஸ்ரே ஆகும். எக்ஸ்ரே எடுப்பதின் மூலம் எலும்புகளில் ஏற்பட்ட முறிவு மற்றும் விரிசல்களைக் கண்டறிந்து சரியான சிகிச்சை அளிக்க முடிகிறது. இதனை கண்டுபிடித்தவர் வில்ஹெல்ம் ராண்ட்ஜன் என்ற ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி ஆவார். ஏற்கனவே எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை யாரும் விளக்கவில்லை. 1895ஆம் ஆண்டு ராண்ட்ஜன் பொருட்களில் எக்ஸ் கதிர்களின் ஊடுவருவல் பற்றி ஆய்வுகள் நடத்திக்கொண்டிருந்தார். ஒரு ஈயத்தட்டை எக்ஸ் கதிர்களுக்கு முன்னர் அவர் பிடித்தபோது, அக்கதிர்கள் ஈயத்தட்டின் உருவத்தை மட்டும் அல்லாமல் அவரின் கட்டை விரலின் படிமத்தையும் படம் பிடித்திருந்தது. கைவிரல் எலும்புகளின் படங்கள் அவற்றின் நிகழ்களை விடக் கருமையாகக் காட்சியளித்தன. ஒளியினால் ஊடுருவமுடியாத பொருட்களையும் எக்ஸ் கதிர் ஊடுருவிச் செல்லும் என்பதை ராண்ட்ஜன் கண்டுபிடித்து வெளியிட்டார்.

இவரின் கண்டுபிடிப்பை பயன்படுத்தி ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்பு முறிவு ஒன்றைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு மருத்துவத்திற்காக எக்ஸ் கதிர் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1901ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. எக்ஸ்ரே என்பது மருத்துவத்துறை வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book