22 மோட்டார் கார்
சாலைகளில் இன்று விதவிதமான கார்கள், அதிக வேகத்துடன் செல்வதைக் காண்கிறோம். இந்த மோட்டார் காரை முதன்முதலில் கண்டுபிடித்து ஓட்டியவர் கார்ல் பென்ஸ் (Karl Benz) என்னும் ஜெர்மனியர் ஆவார். இவர் மோட்டார் இயந்திரவியலாளரும், எந்திர வடிவமைப்பாளரும் ஆவார். இவர் 1885ஆம் ஆண்டு இயந்திரக் காரைக் கண்டுபிடித்தார். அந்தக் காரானது 3 சக்கரம் மட்டுமே கொண்டது. இரும்பு கம்புகள் கொண்ட ஸ்போக் (Spoked) சக்கரம். இதில் கெட்டியான ரப்பர் டயர் இடம்பெற்றிருந்தது. அதாவது சக்கரம் சைக்கிள் சக்கரம் போன்றதே. இதில் ஒரு சிறிய எஞ்சின் மற்றும் பல் சக்கரங்கள் ஆகியவற்றுடன் கூடிய இயந்திரம். இது பெட்ரோல் மூலம் இயங்கக் கூடிய இயந்திரம். இந்தக் கார் குதிரை இல்லாத வண்டியைப் போன்ற தோற்றம் கொண்டது. இதனை இவரின் பெயராலேயே பென்ஸ் மோட்டார் வேகன் அல்லது பென்ஸ் மோட்டார் கார் என்று அழைத்தனர்.
இந்தக் காரின் தயாரிப்பு செலவு 1885ஆம் ஆண்டில் $ 1000 ஆகும். இது மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியதாக இருந்தது. இதற்கான காப்புரிமையை 1886ஆம் ஆண்டில் பெற்றார். இதுவே முதன்முதலில் எஞ்ஜின் பொருத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட காராகும். அதன் பிறகு இவர் 4 சக்கரம் உடைய காரை தயாரித்தார். 1885 முதல் 1893ஆம் ஆண்டிற்குள் 25 கார்களை உருவாக்கினார்.
Feedback/Errata