பூமியின் மிகமிக உயரமான சிகரம் எவரெஸ்ட் சிகரமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 29029 அடி உயரம் கொண்டது. இது எப்போதும் பனியால் மூடப்பட்டே இருக்கும். எவரெஸ்ட் சிகரத்தின் மீது முதன்முதலாக ஏறி நின்ற மனிதர் எட்மண்ட் ஹில்லாரி (Edmund Hillary) ஆவார். இவர் 1953ஆம் ஆண்டு மே 29 அன்று காலை 11.30 மணிக்கு எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி நின்றார். இதன் மூலம் மனித காலடி முதன்முதலாக எவரெஸ்ட் சிகரத்தின்மீது பட்டது. இது உலகின் மிகப் பெரிய சாதனையாகும். அவரைத் தொடர்ந்து அவருடன் சென்ற டென்சிங் நார்கே இரண்டாவது நபராக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி நின்றார். ஹில்லாரி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு முன்பே உலகின் வெவ்வேறு உயரமான 11 சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

ஹில்லாரியின் சாதனை இத்துடன் முடியவில்லை. அவர் 1958ஆம் ஆண்டு ஜனவரி 4 அன்று முதன்முதலில் உலகின் தென்முனையான அண்டார்டிகா சென்றடைந்தார். அதன் பிறகு 1985ஆம் ஆண்டு வடதுருவம் சென்றார். இதன் மூலம் உலகின் இரு துருவங்களையும், தொட்ட முதல் மனிதர் என்ற பெருமையையும் பெற்றார். இப்படி உலகின் மிகப் பெரிய சாதனைகளை படைத்த எட்மண்ட் ஹில்லாரி ஜெட் படகு மூலம் கங்கை நதியின் எதிர்த்திசையில் பயணம் செய்து அதன் வாய்ப்பகுதியையும் அடைந்து சாதனை புரிந்துள்ளார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book