பூமியின் கடல் மட்டத்தைவிட ஆழமானப் பகுதியில் ஒரு ஏரி உள்ளது. இதனை சாக்கடல் (Deadsea), இறந்த கடல் மற்றும் உப்புக் கடல் எனப் பல பெயர்களில் அழைக்கின்றனர். இது ஜோர்டானின் கிழக்கு மற்றும் பாலஸ்தீனம், இஸ்ரேலின் மேற்கு கரையை எல்லையாகக் கொண்டுள்ளது. இதில் தாவரங்கள், மீன்கள், நண்டுகள் போன்ற உயிரினங்கள் வாழ முடியாத காரணத்தால் இதனை சாக்கடல் அல்லது இறந்த கடல் என்கின்றனர். இதற்குக் காரணம் இதில் அதிகப்படியான உப்பு உள்ளது. அதாவது பொதுவான கடல் நீரில் உள்ள உப்புத்தன்மையைவிட 8.6 மடங்கு அதிகமான உப்பு உள்ளது. இது முழுவதும் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 423 மீட்டர் (1338 அடி) கீழே அமைந்திருக்கிறது. இது 67 கி.மீ. நீளமும், 18 கி.மீ. அகலமும் கொண்டது. இதற்கு ஜோர்டான் ஆறிலிருந்து நீர் கிடைக்கிறது. ஆறு மூலம் உப்பும் மற்றும் நீர் ஆவியாதலால் உப்புத் தன்மை அதிகரித்துள்ளது.

சாக்கடலின் நீரில் உப்புத் தன்மை அதிகமாக உள்ளதால் நீரின் அடர்த்தி அதிகமாக உள்ளது. இதனால் மனிதர்கள் இக்கடல் நீரில் மூழ்கிவிடாமல் மிதக்கின்றனர். மனிதர்களின் அடர்த்தியைவிட சாக்கடல் நீரின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் மனிதர்கள் குதித்தால் மூழ்குவதில்லை. இதில் படுத்துக்கொண்டே பேப்பரும் படிக்கின்றனர். இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் சென்று வருகின்றனர். பூமியிலேயே கடல் மட்டத்திற்குக் கீழே மிகத் தாழ்ந்த பகுதி சாக்கடல்தான்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book