உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (Angel Falls) ஆகும். இதுவே உலகில் மிக உயரமான இடத்திலிருந்து எந்த தடையும் இன்றி விழுகின்ற நீர்வீழ்ச்சியாகும். இது தென்னமெரிக்க கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டின் கனைமா தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. இது அவென்டியூய் (Auyantepui) என்னும் மலையின் 979 மீட்டர் உயர முகட்டிலிருந்து செங்குத்தாக விழுகிறது. அதாவது 3212 அடி உயரம். இது 807 மீட்டர் (2,648 அடி) எந்த தடையும் இன்றி விழுகிறது. இதன் ஒரு துளி நீர் தரையை அடைய 14 நிமிடங்கள் எடுக்கின்றன. நீர் வீழ்ச்சியிலிருந்து விழும் நீரானது தரையை அடையும் முன்னதாக அங்கு வீசும் காற்றினால், பெருமளவில் பனித்துளிகள்போல் ஆவியாக பறக்கின்றன. எஞ்சியவையே கெரெப் என்னும் ஆற்றில் விழுகின்றன. அந்த ஆறு சுருண் ஆற்றில் கலக்கிறது. இந்த நீர்வீழ்ச்சி 20ஆம் நூற்றாண்டிலே வெளி உலகிற்கு தெரியவந்தது. 1933ஆம் ஆண்டு அமெரிக்க விமானி ஜிம்மி ஏஞ்சல் என்பவர் தங்கத்தைத் தேடி மலைகளின்மேல் பறந்து சென்றபோது நீர் வீழ்ச்சியைக் கண்டார். அதன் பிறகே வெளி உலகிற்குத் தெரிய வந்தது. அதனால் அதற்கு அவரின் பெயரால் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி என அழைக்கப்பட்டது.

இந்த நீர்வீழ்ச்சி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வீழ்ந்துகொண்டிருக்கிறது. செவ்விந்தியர்கள் இதனை சுருண் மேரு என்று அழைத்தனர். இது உள்நாட்டு மக்களின் சொத்து. உள்நாட்டு மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று என்பதால் இந்த நீர்வீழ்ச்சியை கீரிபாகுபாய் வீனா (Kerepakupai Vena) என்ற பெயரில் அழைக்குமாறு வெனிசுலா ஜனாதிபதி ஹீகோ சாவேஸ் 2009 இல் அறிவித்தார். இதற்கு நீர்வீழ்ச்சி மிகவும் ஆழமான இடத்தில் விழுதல் என்பது பொருளாகும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book